உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

குன்னத்தூர்-வீரபாண்டி பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-12-13 08:07 GMT   |   Update On 2021-12-13 08:07 GMT
திருப்பூர் வீரபாண்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
குன்னத்தூர்:

குன்னத்தூர் பகுதியில் 16 வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி இந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட குன்னத்தூர், ஆதியூர், தளபதி, காவுதம்பாளையம், வெள்ளி ரவெளி, கணபதிபாளையம், சின்னியம்பாளையம், செட்டிகுட்டை, குறிச்சி, தண்ணீர்பந்தல் பாளையம், சொக்கனூர், எடையபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பெருந்துறை மின் பொறியாளர் தெரிவித்தார்.

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தி.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வீரபாண்டி, பாலாஜிநகர், பாரதிநகர், நொச்சிபாளையம் பிரிவு (வாய்க்கால்மேடு), குப்பாண்டம்பாளையம், சின்னக்கரை, டி.கே.டி.மில், ஜே.ஜே.நகர், புளியங்காடு, கிருஷ்ணாநகர், லட்சுமிகார்டன், விக்னேஸ்வரநகர் பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை சுண்டமேடு, ஜவஹர் நகர், அம்பேத்கர்நகர், சூர்யாநகர் கரைபுதூர், டி.பி.நகர். நொச்சிபாளையம், டி.கே.டி. மில் பஸ் ஸ்டாப், முல்லைநகர் கர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News