உள்ளூர் செய்திகள்
கைது

தஞ்சையில் லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2021-12-10 09:08 GMT   |   Update On 2021-12-10 09:08 GMT
தஞ்சையில் லாரியில் மணல் கடத்தியது தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை வடக்கு வாசலில் மேற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து லாரியை ஓட்டி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நடுக்காவேரி சேர்ந்த மனுநீதி சோழன் (வயது23), ராஜேந்திர ஆற்காட்டை சேர்ந்த ரகு (21) என்பதும், லாரியில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் கடத்திய மனுநீதி சோழன், ரகு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News