உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே ஊராட்சி தலைவரிடம் தகராறு செய்தவர் கைது
தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 48). இவர் மது அருந்திவிட்டு மாதப்பூர் சுகாதார மையத்திற்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிந்தசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.