உள்ளூர் செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை

எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்- உயர்நீதிமன்ற நீதிபதி

Published On 2021-12-09 07:39 GMT   |   Update On 2021-12-09 07:39 GMT
உறுதிமொழியை மீறி ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் சாட்டை துரைமுருகனின் ஜாமின் ரத்து செய்யப்படும் என நீதிபதி புகழேந்தி எச்சரிக்கை விடுத்தார்.
மதுரை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து  இவ்வழக்கில் சாட்டை துரைமுருகன் ஜாமின் பெற்றார்.

இந்நிலையில், சாட்டை துரைமுருகனின் ஜாமினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தது.



இம்மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி பணியாற்றி வருகிறார்.

முதல்வரின் பணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும் தமிழக அரசு மீது என்ன குற்றம் கண்டுவிட்டீர்? என கேள்வி எழுப்பிய நீதிபதி புகழேந்தி உறுதிமொழியை மீறி ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் சாட்டை துரைமுருகனின் ஜாமின் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
Tags:    

Similar News