உள்ளூர் செய்திகள்
முதல்வர் ஸ்டாலின்

பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து அதிர்ச்சியடைந்தேன் - மு.க.ஸ்டாலின்

Published On 2021-12-08 11:24 GMT   |   Update On 2021-12-08 15:22 GMT
மீட்பு பணிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு உள்ளூர் பகுதி அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. இதில் மொத்தம் 14 பேர் பயணித்த நிலையில், 13 பேர் உயிரிழந்தனர். தமிழக முதல்வர்  ஸ்டாலின், குன்னூர் செல்கிறார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்:

ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தை சந்தித்தது அதிர்ச்சியை அளிக்கிறது. மீட்பு பணிகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு உள்ளூர் பகுதி அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளேன். விபத்து நடந்த பகுதிக்கு நான் உடனடியாக செல்ல உள்ளேன்.

இவ்வாறு தமது பதிவில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News