உள்ளூர் செய்திகள்
கொள்ளை

பாளை அருகே வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2021-12-07 09:58 GMT   |   Update On 2021-12-07 09:58 GMT
பாளை அருகே வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

பாளை அருகே உள்ள டக்கரம்மாள்புரத்தை அடுத்த ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கப்ப பாண்டியன் (வயது 33). இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.

நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் எடையுள்ள தங்க செயின் மற்றும் மோதிரங்கள், ரொக்கப் பணம் ரூ 1 லட்சத்து 26 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ 3 லட்சம் ஆகும்.

இது குறித்து அங்கப்ப பாண்டியன் பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று கைரேகைகளை ஆய்வு செய்தனர். தடயங்களையும் சேகரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News