உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

புதிய தொற்று 719, உயிரிழப்பு 10... தமிழகம் கொரோனா அப்டேட்ஸ்

Published On 2021-12-06 15:08 GMT   |   Update On 2021-12-06 15:08 GMT
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 737 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று அதிகபட்சமாக சென்னையில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 120 பேருக்கும், ஈரோட்டில் 58 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் திருப்பூரில் தலா 59 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 40 பேருக்கும், சேலத்தில் 39 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 31 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 737 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 86 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,539 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 8,013 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றை கண்டறிவதற்காக கடந்த 24 மணி நேரத்தில் 1,01,255 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
Tags:    

Similar News