உள்ளூர் செய்திகள்
கத்தரிக்காய்

நாமக்கல் உழவர் சந்தையில் கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கு விற்பனை

Published On 2021-12-06 04:43 GMT   |   Update On 2021-12-06 04:43 GMT
நாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.120-க்கு விற்பனையானது.
நாமக்கல்:

நாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று 20 டன் காய்கறிகள் மற்றும் 4 டன் பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இவை ரூ.10 லட்சத்து 49 ஆயிரத்து 740-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 4,210 பேர் வாங்கி சென்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.90-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.120-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.70-க்கும், புடலங்காய் கிலோ ரூ.80-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.90- க்கும், பீட்ரூட் கிலோ ரூ.64-க்கும், கேரட் கிலோ ரூ.68-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.88-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.50-க்கும், இஞ்சி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்ன வெங்காயம் கிலோ ரூ.45-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த வாரம் கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோவுக்கு ரூ.40 அதிகரித்து கிலோ ரூ.90-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் நேற்று கிலோவுக்கு ரூ.30 அதிகரித்து கிலோ ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகளின் வரத்து குறைந்து இருப்பதால், அவற்றின் விலை அதிகரித்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News