உள்ளூர் செய்திகள்
தற்கொலை

மதுரை அருகே கணவர் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை

Published On 2021-12-06 03:45 GMT   |   Update On 2021-12-06 03:45 GMT
மதுரை அருகே கணவர் இறந்த சோகத்தில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி பரமேசுவரி (வயது 38). கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் விபத்தில் இறந்து விட்டார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட பரமேசுவரி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News