உள்ளூர் செய்திகள்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்
தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி ஏற்கனவே நாகாலாந்து ஆளுநராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் ஆளுநர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள இருந்த நிலையில், அவசர பயணமாக டெல்லி சென்றுள்ளார். நாகாலாந்து பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க உள்துறை அமைச்சகம் அவரை அழைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்...நேற்றைவிட சற்று குறைந்தது- தமிழகத்தில் இன்று 724 பேருக்கு கொரோனா தொற்று