உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

பழனி அருகே மொபட் மீது கார் மோதல்: விவசாயி பலி

Published On 2021-12-05 10:52 GMT   |   Update On 2021-12-05 10:52 GMT
பழனி அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:

பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 58). விவசாயி. இவர் நேற்று காலை மொபட்டில் பழனி அருகே ராமநாதன்நகர் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சண்முகநதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக முருகேசன் மொபட் மீது மோதியது.

இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த பழனி அடிவாரம் போலீசார் விரைந்து சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News