உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் முன்னாள் படை வீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 7ந்தேதி நடக்கிறது
முன்னாள் படை வீரர்கள் கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக சமர்ப்பித்து பயனடையலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படை வீரர்கள், படையில் பணிபுரியும் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை ) மாலை 5 மணி அளவில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மேற்கண்ட அனைவரும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக சமர்ப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.