உள்ளூர் செய்திகள்
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்.

பல்லடத்தில் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

Published On 2021-12-05 08:02 GMT   |   Update On 2021-12-05 08:02 GMT
பல்லடம் வக்கீல்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
பல்லடம்:

பல்லடம்  வக்கீல்கள் சங்கத்தில் 84 வக்கீல்கள்  உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுதோறும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவில்லை.

இந்த நிலையில் பல்லடம் வக்கீல்கள்  சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது .தேர்தல் நடத்தும் அலுவலர்களாக வக்கீல்கள் ஈஸ்வரமூர்த்தி, மாணிக்கராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.

இதில் தலைவராக பாலசுப்பிரமணியம், செயலாளராக சக்திவேல், பொருளாளராக சக்தி தேவி, செயற்குழு உறுப்பினர்களாக கீர்த்திவர்மன், மகேஷ், அப்துல் ரகுமான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு மற்ற வழக்கறிஞர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Tags:    

Similar News