உள்ளூர் செய்திகள்
வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே கெங்கமுத்தூரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 35) விவசாயி. இவருடைய மனைவி பழனியம்மாள் (28). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் பாலமேட்டிற்கு சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்த போது கெங்கமுத்தூர் பஸ்நிறுத்தம் அருகே நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதனால் கண்ணன் திடீரென்று பிரேக் பிடித்ததால் பழனியம்மாள் கீழே நிலை தடுமாறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இது சம்பந்தமாக கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.