உள்ளூர் செய்திகள்
விபத்து பலி

திருச்சிற்றம்பலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

Published On 2021-12-04 12:34 GMT   |   Update On 2021-12-04 12:34 GMT
திருச்சிற்றம்பலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சிற்றம்பலம்:

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள துறவிக்காடு கீழத்தெருவை சேர்ந்தவர் மதியழகன் (வயது 55). விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் மாலை திருச்சிற்றம்பலம் கடைவீதியில் இருந்து துறவிக்காடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோவில் தெரு பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக அவரது உறவினர்கள் மீட்டு பட்டுக்கோட்டையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே மதியழகன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தை ஏற்படுத்தியவர் தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு, விட்டு தலைமறைவாகி விட்டார். தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மதியழகன் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்தி்ரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த மதியழகனுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
Tags:    

Similar News