உள்ளூர் செய்திகள்
ஊரக திட்ட தொழிலாளர்களின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சியில் கடந்த 2 மாதமாக இப்பணிகள் நடந்து வருகிறது.
அவிநாசி:
அமைப்பு சாரா தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் மத்திய அரசு, இ-ஷ்ரம் என்ற இணைய தளத்தில் அவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
இதில் விவசாய கூலி தொழிலாளர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றுவோர், புலம் பெயர்ந்த தொழிலாளர், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலில் ஈடுபடுவோர், தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்கின்றனர்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சியில் கடந்த 2 மாதமாக இப்பணிகள் நடந்து வருகிறது. இதனால் மத்திய அரசு அறிவிக்கும் திட்டங்கள் மூலம் பயன்பெறுவது எளிதாக இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.