உள்ளூர் செய்திகள்
குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தென்னையைசார்ந்த கொப்பரை தேங்காய் உற்பத்தியும் குடிமங்கலம் பகுதியில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
குடிமங்கலம்:
குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
இன்றைய நிலையில் விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கூலித்தொழிலாளர் பற்றாக்குறை ஆகும். கூலித்தொழிலாளர் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்க தீர்வு தேடும் விவசாயிகள் தேர்ந்தெடுப்பது தென்னை சாகுபடியாகும். தென்னை சாகுபடியைப் பொறுத்தவரை தொடர் பராமரிப்பு, அறுவடை போன்றவற்றில் அதிகளவில் ஆட்கள் தேவை இல்லை.
இதனால் குடிமங்கலம் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகரித்து வருகிறது. இது தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு பயனளிப்பதாக உள்ளது.
மேலும் தென்னையைசார்ந்த கொப்பரை தேங்காய் உற்பத்தியும் குடிமங்கலம் பகுதியில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பல விவசாயிகள் காய்கறி சாகுபடிக்கு மாறி வந்தனர். காய்கறி சாகுபடி தொழிலில் தொழிலாளர்கள் தேவைப்பட்டாலும் குறுகிய காலத்தில் தொடர் வருவாய் என்ற அடிப்படையில் பலரும் காய்கறி சாகுபடி மேற்கொள்கின்றனர்.
ஒரு சில நேரங்களில் பருவம் தவறிய மழை பெய்து கெடுக்கிறது. இதுவும் விவசாயிகளின் காய்கறி சாகுபடியில் ஈடுபடாமல் இருப்பதற்கு காரணமாகும். இதன் காரணமாக தென்னை சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.