உள்ளூர் செய்திகள்
திருட்டு

ஆம்பூர் அருகே கோவில்களில் திருட்டு

Published On 2021-12-03 11:39 GMT   |   Update On 2021-12-03 11:39 GMT
ஆம்பூர் அருகே கோவில்களில் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாச்சார்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கம்மியம்பட்டு பகுதியில் காலபைரவர் மற்றும் அருகாமையில் காளியம்மன் கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியலில் இருந்த பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

நேற்று காலை பூசாரி வழக்கம்போல் கோவிலை திறக்க சென்றபோது கோவில் கதவுகள் மற்றும் உண்டியல் ஆகியவை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் தாலுகா போலீசார் 2 கோவில்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News