உள்ளூர் செய்திகள்
குள்ளனம்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை
குள்ளனம்பட்டி அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
சிறுமலையை அடுத்த தாழக்கடையை சேர்ந்த சரவணன் மனைவி செல்வராணி (வயது 22). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு சவுமியா என்ற 3 மாத பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் செல்வராணி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதில் மனம் உடைந்த செல்வராணி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்வராணிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் அவருடைய சாவு குறித்து ஆர்.டி.ஓ. காசிசெல்வி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.