உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை, மடத்துக்குளம், அவிநாசி பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-12-03 09:46 GMT   |   Update On 2021-12-03 09:46 GMT
உடுமலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஏரிப்பாளையம், சின்னவீரம்பட்டி, லட்சுமி நகர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
உடுமலை:

உடுமலை, மடத்துக்குளம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளர் சி.சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.

உடுமலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், ஏரிப்பாளையம், சின்னவீரம்பட்டி, லட்சுமி நகர், சிவசக்தி காலனி, சங்கர்நகர், வேலன் நகர், வாசவி நகர், செல்லம் குடியிருப்பு, புஷ்பகிரி வேலன் நகர், தங்கம்மாள் ஓடை, எம்.பி.நகர், கடை வீதி, பொள்ளாச்சி பாதை, காந்தி நகர் 2, சிங்கப்பூர்நகர், நேரு நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. 

மடத்துக்குளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மடத்துக்குளம், கணேசபுரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், வேடபட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. 

அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 4-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம் வருமாறு:

அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி. காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூர், சக்தி நகர், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகள் ஆகும்.
Tags:    

Similar News