உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே விபத்தில் மாற்றுத்திறனாளி பலி
முனியம்மாளுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகேயுள்ள மகாலட்சுமி நகர் 9 வது வீதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சுரேஷ்(வயது 35). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி முனியம்மாள் (30). இருவரும் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை கணவன் மனைவி - இருவரும் 3 சக்கர ஸ்கூட்டரில் பல்லடத்தில் இருந்து திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்குவதற்காக சென்று கொண்டிருந்தனர் .
அப்போது பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். முனியம்மாளுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.