உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக்

இனி டாஸ்மாக் வழக்கமான நேரத்தில் செயல்படும்- டாஸ்மாக் நிர்வாகம்

Published On 2021-12-03 06:54 GMT   |   Update On 2021-12-03 06:56 GMT
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வழக்கமான நேரத்தில் செயல்பட இருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு மாநிலம் முழுவம் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அப்போது, டாஸ்மாக் கடைகளும் முழு நேரமும் மூடப்பட்டது.

பின்னர், கொரோனா தொற்றின் எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கியதும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்தது.

அதில், கடந்த ஜூலை மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தன.

இந்நிலையில், இனி டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் இனி வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. இந்தியாவில் 10 ஆண்டுகளில் 1, 160 யானைகள் பலி
Tags:    

Similar News