உள்ளூர் செய்திகள்
உடுமலை அருகே சேவல் சண்டை- 6 பேர் கைது
நவகிரக பள்ளத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவதாக தளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடுமலை:
உடுமலையை அடுத்த தளி காவல் சரகத்துக்கு உட்பட்ட ராவணாபுரம் அருகே உள்ள நவகிரக பள்ளத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவதாக தளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் ராவணாபுரம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ராவணாபுரம், வல்லகுண்டாபுரம், எரிசனம்பட்டி பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (வயது30), காளிமுத்து (26), சிவக்குமார் (40), செல்வராஜ் (43), தனபால் (27), ராஜசேகர் (22) உள்ளிட்டோர் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 சேவல்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.