உள்ளூர் செய்திகள்
முக ஸ்டாலின்

89வது பிறந்தநாள்- கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2021-12-02 04:57 GMT   |   Update On 2021-12-02 04:57 GMT
11 வயதில் கைகளில் ஏந்திய லட்சியக் கொடியை 89-ம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர் என்று முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி உள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு சுயமரியாதைப் பாடங்களைப் தெளிவாகப் பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதிப் போர்க்களத்தின் சளைக்காத போராளி. கலைஞரின் கொள்கை இளவல். நெருக்கடி நிலைக் காலத்து சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி. எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழிக்காட்டிடும் திராவிடப் பேரொளி.



11 வயதில் கைகளில் ஏந்திய லட்சியக் கொடியை 89-ம் அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்காலத் தலைமுறையினரிடம் பெரியாரைப் பரப்பும் பெருந்தொண்டர்.

தாய்க் கழகமாம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Tags:    

Similar News