உள்ளூர் செய்திகள்
மணல் கடத்தல்

குளித்தலை அருகே மணல் திருட்டு வழக்கில் 5 பேர் கைது

Published On 2021-12-01 20:57 GMT   |   Update On 2021-12-01 20:57 GMT
குளித்தலை அருகே மணல் திருட்டு வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் குளித்தலை போலீசார் அங்கு சென்றபோது குமாரமங்கலம் காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து வெளியே வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

போலீசாரை கண்டதும் அந்த வேனில் இருந்த சிலர் தப்பி ஓடியுள்ளனர். இருப்பினும் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் 1 யூனிட் ஆற்று மணலை சரக்கு வேனில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த வேனை பறிமுதல் செய்த போலீசார் மணல் திருட்டு வழக்கில் தொடர்புடைய குளித்தலை அருகே உள்ள வை.புதூர் பகுதியை சேர்ந்த முருகானந்தம் (வயது 21), பழனிச்சாமி (41), நடராஜ் (36), துளசிநாதன் (21), தர்மலிங்கம் (49) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தப்பி ஓடிய வை.புதூர் பகுதியை சேர்ந்த சகோதரர்களான அய்யப்பன், முருகேசன், திருச்சியை சேர்ந்த தினேஷ் ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News