உள்ளூர் செய்திகள்
தர்மபுரி நகரில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத தியேட்டர், நகை கடைகளுக்கு அபராதம்
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத ஒரு சினிமா தியேட்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோன்று 2 நகைக்கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி நகரில் கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவிட்டார். அதன்படி நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையில் சுகாதார அலுவலர் இளங்கோவன், துப்புரவு ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், நாகராஜன், ரமன சரண் ஆகியோர் தர்மபுரி நேதாஜி பைபாஸ் ரோட்டில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத ஒரு சினிமா தியேட்டருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோன்று 2 நகைக்கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.