செய்திகள்
பேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படங்கள் பதிவேற்றம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
தஞ்சை அருகே பேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள திருக்கானூர்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் அருண் பிரகாஷ் (வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 17.5.2020 அன்று மொபைல் போனில் இருந்து அவருடைய பேஸ்புக்கில் சிறுமிகள் குறித்த ஆபாச படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தார். இணையதளத்தில் அதை பலர் பார்த்தும், பகிர்ந்தும் உள்ளனர்.
இது குறித்து ஆன்லைன் மூலமாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து அந்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அருண் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தஞ்சையை அடுத்துள்ள திருக்கானூர்பட்டி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் அருண் பிரகாஷ் (வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 17.5.2020 அன்று மொபைல் போனில் இருந்து அவருடைய பேஸ்புக்கில் சிறுமிகள் குறித்த ஆபாச படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தார். இணையதளத்தில் அதை பலர் பார்த்தும், பகிர்ந்தும் உள்ளனர்.
இது குறித்து ஆன்லைன் மூலமாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து அந்த புகாரின் பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அருண் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.