செய்திகள்
கொள்ளை

களியக்காவிளை அருகே வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

Published On 2021-11-30 10:12 GMT   |   Update On 2021-11-30 10:12 GMT
களியக்காவிளை அருகே வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளை:

களியக்காவிளை அருகே இடைவிளாகம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

குடும்பத்தினர் அனைவரும் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்த ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள 3 மோதிரங்களையும் திருடி சென்றனர்.

கனகராஜ் காலையில் எழுந்து பார்த்தபோது பணம் மற்றும் மோதிரத்தை காணவில்லை. அந்த பணம் மகளிர் குழுவில் இருந்து கடனாக பெற்றது ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி லலிதா களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களின் வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News