செய்திகள்
கோப்புபடம்

பின்னலாடை ஜாப் ஒர்க் கட்டணங்கள் 25 சதவீதம் உயர்வு - நாளை முதல் அமல்

Published On 2021-11-30 09:48 GMT   |   Update On 2021-11-30 09:48 GMT
கட்டண தொகைகளை அதிகபட்சம் 30 நாட்களுக்குள் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி விட வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த அனைத்து ஜாப் ஒர்க் சங்க கூட்டு கமிட்டி ஆலோசனை கூட்டம், சபாபதிபுரத்தில் உள்ள ‘நிட்மா’ சங்க அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜாப்ஒர்க் நிறுவனங்களின் உற்பத்தி செலவினம் அதிகரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இதையடுத்து ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஜாப்ஒர்க் சேவை அளிக்கும் அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து டிசம்பர் 1-ந் தேதி முதல் தற்போதைய கட்டணங்களிலிருந்து 25 சதவீதம் உயர்த்தி பெற வேண்டும்.

ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான கட்டண தொகைகளை அதிகபட்சம் 30 நாட்களுக்குள் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி விட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 25 சதவீத கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. 
Tags:    

Similar News