செய்திகள்
பல்லடம் வக்கீல்கள் சங்க தேர்தல் - 3ந்தேதி நடக்கிறது
வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது .
பல்லடம்:
பல்லடத்தில் வக்கீல்கள் சங்கத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதுகுறித்து வக்கீல் சங்க தேர்தல் நடத்தும் அலுவலர் வக்கீல் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:
பல்லடம் வக்கீல்கள் சங்கத்தில் 85 வக்கீல்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுதோறும் தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவில்லை. தற்போது தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது.
தலைவர்,செயலாளர்,பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு தலா 2 நபர்களும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். வருகிற 3-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.