செய்திகள்
வெள்ளகோவிலில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
வெள்ளகோவிலில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள உப்பு பாளையம் ரோடு நூலகம் அருகில் பணம் வைத்து சூதாடுவதாக வெள்ளகோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் தலைமையில் அங்கு சென்ற போலீசார் நூலகத்திற்கு பின்புறம் பணம் வைத்து சூதாடிய வடிவேல்(வயது51), அர்ஜூனன் (37), வேலுச்சாமி(41), சிவக்குமார்(42), ராஜேஷ்(42), வினோத்(36), சரவணன்(40) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்த ரூ.9 ஆயிரத்து 240ஐ கைப்பற்றினர்.