செய்திகள்
தேர்வு செய்யப்பட்ட வீரர்கள்.

மாநில கபடி போட்டி-திருப்பூரில் வீரர்கள் தேர்வு

Published On 2021-11-29 07:00 GMT   |   Update On 2021-11-29 07:00 GMT
சேலத்தில் நடைபெறும் மாநில மிக இளையோருக்கான கபடி போட்டிக்கு வீரர்&-வீராங்கனைகள் தேர்வு திருப்பூரில் நடைபெற்றது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெறும் மாநில மிக இளையோருக்கான கபடி போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு திருப்பூர் மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் தலைமை தாங்கினார். பொருளாளர் ஆறுச்சாமி ,தேர்வு கமிட்டி தலைவர் ருத்ரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 14 வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் காவியஸ்ரீ, ஸ்ரீபிரியா, திவ்யலட் சுமி, சுடியக்கா, மைதிலி, ஜோதிலட்சுமி, மேகலா ஆகிய 7 வீராங்கனைகளும், குருபிரசாத், நிஷாந்த், சாந்தப்பிரியன், அங்கித்து, மதன்குமர், இனியன், கார்வேந்தன் ஆகிய 7 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இணைசெயலாளர்கள் வாலிசன், சின்னு, செல்வராஜ், பயிற்சி யாளர்கள் வெங்கடேஷ், நாகராஜ், நடுவர் முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News