செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே டாஸ்மாக் பார் ஊழியர் தற்கொலை

Published On 2021-11-28 07:59 GMT   |   Update On 2021-11-28 07:59 GMT
கடந்த வாரம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என்று ஜெயபிரகாஷ் அவரது தந்தை சவுந்தரராஜனிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல்லடம்:

புதுக்கோட்டையை சேர்ந்த சவுந்தரராஜன் மகன் ஜெயப்பிரகாஷ்(வயது 31). இவர் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரில் வாடகை வீட்டில் தங்கிகொண்டு இடுவாய் டாஸ்மாக் பாரில் ஊழியராக  வேலை செய்து  வந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் சொந்தமாக தொழில்  தொடங்க ரூ.5 லட்சம் பணம் வேண்டும் என்று அவரது தந்தை சவுந்தரராஜனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு இப்போதைக்கு பணம் தர முடியாது என அவரது தந்தை மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று வீட்டின் விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன் தங்கி இருந்த பிரசாத் வேலை முடிந்து வீடு திரும்பிய போது தூக்கு போட்ட நிலையில் ஜெயப்பிரகாஷ் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை  மீட்டு  பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News