செய்திகள்
கோப்புபடம்

உள்ளாட்சி தேர்தல்-தேர்தல் பணியாளர்கள் விவரம் சேகரிக்கும் பணி தீவிரம்

Published On 2021-11-28 06:47 GMT   |   Update On 2021-11-28 06:47 GMT
கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளாரா? உள்ளிட்ட விபரங்கள் விண்ணப்ப படிவங்கள் மூலமாக சேகரிக்கப்படுகின்றன.
திருப்பூர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இந்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறுவது எல்லா கட்சிகளிலும் தொடங்கி விட்டது.

இந்தநிலையில் ஓட்டுச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர் பட்டியல் தயாரிக்க ஒவ்வொரு துறைக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து திருப்பூர்  மாவட்ட கல்வித்துறையில் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 

அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வி அலுவலக ஊழியர்கள் பெயர், பள்ளி, வசிக்குமிடம், சொந்த ஊர், ஏற்கனவே தேர்தல் பணியாற்றி உள்ளாரா? கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளாரா?  உள்ளிட்ட விபரங்கள் விண்ணப்ப படிவங்கள் மூலமாக சேகரிக்கப்படுகின்றன.
Tags:    

Similar News