செய்திகள்
அரசு அலுவலகத்தில் புகுந்து அதிகாரி மீது தாக்குதல் - 2 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே அரசு அலுவலகத்தில் புகுந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை:
தென்காசி மாவட்டம் மாடசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 42). இவர் மார்த்தாண்டத்தை அடுத்த ஞாறான்விளை தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.
விற்பனைக் கூடத்தில் கடந்த 2-ந் தேதி படிக்கற்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக ராஜலிங்கத்துக்கும், அப்பகுதியில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த செல்லக்குட்டி என்ற சுரேஷ், ஞாறான்விளை சேர்ந்த மணி ஆகியோருக்கும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ராஜலிங்கம் மார்த்தாண்டம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் செல்லக்குட்டி என்ற சுரேஷ் மற்றும் மணி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.