செய்திகள்
மோசடி

கோவையில் முதியவரின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் எடுத்து மோசடி

Published On 2021-11-27 11:11 GMT   |   Update On 2021-11-27 11:11 GMT
முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை எடுத்து நூதன முறையில் மோசடி செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:

கோவை கே.கே.புதூர் அருகே உள்ள அருணாச்சல கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 77).

சம்பவத்தன்று இவரது செல்போனுக்கு பான்கார்டு எண்ணை உடனடியாக வங்கி கணக்கில் இணைக்கவில்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் என மெஜேஜ் வந்தது. இதனை பார்த்த மணிகண்டன் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றார். அப்போது யாரோ மர்மநபர் முதியவரின் வங்கி கணக்கில் இருந்து கண்இமைக்கும் நேரத்தில் ரூ.3 லட்சம் எடுத்தனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் முதியவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை எடுத்து நூதன முறையில் மோசடி செய்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News