செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் அருகே பந்தலுக்கு தீ வைப்பு

Published On 2021-11-27 08:58 GMT   |   Update On 2021-11-27 08:58 GMT
செக்கிங் சென்டர் முன்பு வாகனம் நிறுத்துவதற்காக இம்மானுவேல் தென்னை ஓலையால் பந்தல் அமைத்துள்ளார்.
பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் செந்தூரான் காலனி பகுதியை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது  46). இவர் அதே பகுதியில் பனியன் செக்கிங் சென்டர் நடத்தி வருகிறார். செக்கிங் சென்டர் முன்பு வாகனம் நிறுத்துவதற்காக தென்னை ஓலையால் பந்தல் அமைத்துள்ளார் .

இந்த நிலையில் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததாகவும், அதனால் பந்தல் பாதி அளவு எரிந்து சேதம் ஆனதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும் பந்தலை தீவைத்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பல்லடம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News