செய்திகள்
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தவிக்கும் பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஆஸ்பத்திரிக்கு பலர் வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் பலர் வருகின்றனர். நோயாளிகளுக்கு உதவ அவர்களது உறவினர்களும் வருகின்றனர். இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு அமர்வதற்கான வசதிகள் இல்லை. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தரையில் அமர்ந்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மழையிலும், வெயிலிலும் நின்று கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே நோயாளிகள் மற்றும் உறவினர்கள் வசதிக்காக காத்திருக்கும் அறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.