செய்திகள்
என்.எஸ்.எஸ். அலகு -2 மாணவர்கள் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
திருப்பூர்
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் மெகா ஸ்வட்ச் பாரத்தூய்மை பணி முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் குமரன் நினைவகத்தில் அக்கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலகு-2 மாணவர்கள் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.
இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு குமரன் நினைவக வளாகத்தில் கிடந்த குப்பைகளை அகற்றினர்.மேலும் மரங்கள் பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.