செய்திகள்
உறுதிமொழி ஏற்ற மாணவர்கள்.

பள்ளி மாணவர்கள் அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

Published On 2021-11-27 08:40 GMT   |   Update On 2021-11-27 08:40 GMT
வல்லரசு இந்தியா எனும் தலைப்பில் முதுகலை பொருளியல் ஆசிரியர் தேவிகா பேசினார்.
உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் இந்திய அரசமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை  கண்ணகி தலைமை தாங்கினார். அறிவியல் ஆசிரியர் ஜான் பாஷா வரவேற்றார். 

இந்திய அரசியலமைப்பு தினத்தின் முக்கியத்துவம் குறித்து நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்  சரவணன் பேசினார். வல்லரசு இந்தியா எனும் தலைப்பில் முதுகலை பொருளியல் ஆசிரியர் தேவிகா பேசினார்.

அறிவியல் ஆசிரியர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.  மாணவர்கள், ஆசிரியர்கள் அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Tags:    

Similar News