செய்திகள்
12-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்
மாவட்டத்தின் 646 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. காலை 7மணி முதல் இரவு 7மணி வரை முகாம் நடக்கிறது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 25லட்சத்து 61ஆயிரத்து 444 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் 12-வது கட்ட தடுப்பூசி முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நாளை நடக்கிறது.
மாவட்டத்தில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சிகளிலும், நகராட்சி மற்றும் மாநகராட்சியிலும் தடுப்பூசி கிடைப்பதற்காக முகாம் அமைத்து விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தின் 646 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. காலை 7மணி முதல் இரவு 7மணி வரை முகாம் நடக்கிறது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 2581 பேர் ஈடுபடுகின்றனர்.திருப்பூர் மாநகராட்சியின்17 நகர் நல மையங்களுக்கு உட்பட்ட 138 இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.