செய்திகள்
உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு

Published On 2021-11-27 08:35 GMT   |   Update On 2021-11-27 08:35 GMT
மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
உடுமலை:

உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில்  புகழ் பெற்ற பஞ்சலிங்கம் அருவி உள்ளது. மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிற்றாறுகள் வழியாக தண்ணீர் வந்து பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  இதனால் வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News