செய்திகள்
அபராதம்

வேகமாக வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

Published On 2021-11-27 08:35 GMT   |   Update On 2021-11-27 08:35 GMT
வாகனங்களை அதிவேகமாக ஓட்டிவந்த உரிமையாளர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.68 ஆயிரத்து ஐந்நூறு வசூலானது.
பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா கனகம்மாசத்திரம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன் தலைமையில் வாகன சோதனை நேற்று நடந்தது. இந்த சோதனையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், மோகன், லீலாவதி ஆகியோர் இணைந்து ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டிவந்த உரிமையாளர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.68 ஆயிரத்து ஐந்நூறு வசூலானது.
Tags:    

Similar News