செய்திகள்
ஊரக புத்தாக்க திட்ட பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சமுதாய தொழில் வல்லுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை ஒன்றியம் உட்பட மாவட்டத்தில் 122 ஊராட்சிகளில் தமிழக அரசால் ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பணிகள் மேற்கொள்ள சமுதாய தொழில் வல்லுனர்களாக பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமுதாய தொழில் வல்லுனர்களாக விண்ணப்பிப்பவர்கள் அதே ஊராட்சியை சேர்ந்த 25 முதல் 45 வயதுக்குள் இளநிலை நிர்வாக மேலாண்மை, வங்கி, வணிகவியல், சமூக சேவையியல், வேளாண் அறிவியல், உணவு அறிவியல் மற்றும் கால்நடை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு உடுமலை ஒன்றிய அணித்தலைவர் சந்திரகுமாரை 9685097176 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.