செய்திகள்
கைது

கந்தம்பாளையம் அருகே மொபட் திருடியவர் கைது

Published On 2021-11-27 06:36 GMT   |   Update On 2021-11-27 06:36 GMT
கந்தம்பாளையம் அருகே மொபட் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள கவுண்டிபாளையத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 25). மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று பார்த்தபோது மொபட்டை காணவில்லை. இதுகுறித்து அவர் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தநிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை தலைமையிலான போலீசார் ஆவாரங்காடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக மொபட்டில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் நாமக்கல் செல்லப்பா காலனியை சேர்ந்த சுப்பிரமணி மகன் முத்துபாண்டி (20) என்பதும், ராகுலின் மொபட்டை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து முத்துபாண்டியை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News