செய்திகள்
நல்லூர் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் நல்லூர் ஜெய்நகர் (கிழக்கு) வலம்புரி ஸ்ரீசெல்வவிநாயகர் கோவிலில் 11-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
இதையொட்டி விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, புண்யாக பாசனம், பஞ்ச கவ்ய வழிபாடு, கணபதி வேள்வி, திரவிய யாகம், மகா பூர்ணாகுதி, அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
மேலும் சுவாமிக்கு அலங்கார மகா தீபாராதனை, பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.