செய்திகள்
கைது

பாளையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2021-11-26 10:04 GMT   |   Update On 2021-11-26 10:04 GMT
பாளையில் கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
நெல்லை:

பாளை போலீசார் நீதிமன்றம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாளையை சேர்ந்த எபிநேசர் என்பதும், கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் பாளை பகுதியில் கஞ்சா விற்ற பாலஅஜிதேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News