செய்திகள்
தற்கொலை

நச்சலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2021-11-26 09:46 GMT   |   Update On 2021-11-26 09:46 GMT
நச்சலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நச்சலூர்:

நச்சலூர் அருகே உள்ள தளிஞ்சி மேலப்பட்டியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடைய உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் போசம்பட்டி, பட்டையார் களம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி மண்ணார் (வயது 55) என தெரிய வந்தது. மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News