செய்திகள்
காங்கிரஸ் கட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பெட்ரோல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்

Published On 2021-11-26 09:42 GMT   |   Update On 2021-11-26 09:42 GMT
பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது.
பல்லடம்:

பல்லடம் நகர, வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது.  

நிகழ்ச்சியில் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை தாங்கினார். 

இதில் மாநில பார்வையாளர் மணி, மாவட்ட துணைத்தலைவர் காட்டூர் வெங்கடாசலம், நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நகர செயல் தலைவர் மணிராஜ், வட்டார தலைவர்கள் கணேசன், புண்ணியமூர்த்தி, பொங்கலூர் தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜானகி, வேலுசாமி, சதாசிவம், சாகுல்அமீது, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News