செய்திகள்
அதிமுக

மதுரையில் நாளை தொடக்கம்: மாநகராட்சி 100 வார்டுகளுக்கு அ.தி.மு.க.வில் விருப்ப மனு விநியோகம்

Published On 2021-11-25 11:20 GMT   |   Update On 2021-11-25 11:20 GMT
நாளை முதல் அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
 
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆணைக்கிணங்க மதுரை மாநகராட்சி தேர்தலில் 72 வார்டுகள் மற்றும் பேரவை பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்படுகிறது.

இதற்காக நாளை (26-ந் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகத்தில் விருப்பமனு விநியோகம் தொடங்குகிறது.

வருகிற 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் உட்பட்ட மதுரை மாநகராட்சி 29 வார்டுகளில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 28-ந் தேதி மாலை 5 மணி வரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சட்ட மன்ற அலுவலகம் மற்றும் மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழக நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனுஅளிக்க கேட்டுக்கொள்கிறோம்

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News